ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
கோவை: ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சந்தை நிலவரத்தைக் காட்டிலும் குறைவான விலை, நம்பகதன்மை, உரிய நேரத்தில் டெலிவரி ஆகியவற்றால் மக்களிடையே ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஆன்-லைன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதில், தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அமேஸான் மூலம் கிடைக்க பெறுவதால், எங்களது சேவையில் தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. இங்கு, ஐந்து தன்னிறைவு மையங்களும், சேமிப்பு கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் முன்னணி நிறுவனங்களான சாம்சங், வோல்டாஸ், எல்.ஜி. மின்னனு பொருட்களை அதிகம் வாங்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. என்றார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சந்தை நிலவரத்தைக் காட்டிலும் குறைவான விலை, நம்பகதன்மை, உரிய நேரத்தில் டெலிவரி ஆகியவற்றால் மக்களிடையே ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஆன்-லைன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதில், தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அமேஸான் மூலம் கிடைக்க பெறுவதால், எங்களது சேவையில் தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. இங்கு, ஐந்து தன்னிறைவு மையங்களும், சேமிப்பு கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் முன்னணி நிறுவனங்களான சாம்சங், வோல்டாஸ், எல்.ஜி. மின்னனு பொருட்களை அதிகம் வாங்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. என்றார்.