ஆன்-லைனில் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடம்

ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார்.

கோவை: ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சந்தை நிலவரத்தைக் காட்டிலும் குறைவான விலை, நம்பகதன்மை, உரிய நேரத்தில் டெலிவரி ஆகியவற்றால் மக்களிடையே ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஆன்-லைன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதில், தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அமேஸான் மூலம் கிடைக்க பெறுவதால், எங்களது சேவையில் தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. இங்கு, ஐந்து தன்னிறைவு மையங்களும், சேமிப்பு கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் முன்னணி நிறுவனங்களான சாம்சங், வோல்டாஸ், எல்.ஜி. மின்னனு பொருட்களை அதிகம் வாங்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. என்றார். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...