அழுகிய நிலையில் சடலம் .. எலும்புகள் விற்பனை! தொண்டு நிறுவனத்தில் விசாரணை!

காஞ்சிபுரம் அருகே அழுகிய நிலையில் இறந்த சடலத்தை மறைத்து கடத்திய தனியார் தொண்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட அனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


காஞ்சிபுரம் அருகே அழுகிய நிலையில் இறந்த சடலத்தை மறைத்து கடத்திய தனியார் தொண்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட அனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 

சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் பகுதியில் ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள முதியோர்களைப் பராமரிக்கும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் மீது அடிக்கடி பல்வேறு சந்தேக புகார்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று எடையம்புத்தூர் காட்டு சாலை வழியாக அந்நிறுவனத்குரிய வேன் சென்றது. அப்போது, வேனிலிருந்து காப்பாற்றக் கோரி அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதியினர் இருசக்கர வாகனத்தில் துரத்துச் சென்று வேனை மடக்கி பிடித்தனர். 

அந்த வேனில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த செழியன் மற்றும் திருவள்ளூர் கூவம் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்ற இரு முதியவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது, அந்த வேனில் அழுகிய நிலையில் காய்கறிகளுக்கிடையே ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து சாலாவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, வேனையும், அந்த ஆண் சடலத்தையும் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்து வரும் போலீஸார், முதல்கட்ட தகவலில் ஓட்டுநர் ராஜேஷை கைது செய்துள்ளனர். 

இதனிடையே, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் ராஜூ தலைமையில் 60 மேற்பட்ட அனைத்து துறை அதிகாரிகள், அப்பகுதி மக்கள் சிலர் இன்று 11 மணியளவில் ஆய்வு மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதில், அங்கு தங்கியுள்ளோரின் நிலை மற்றும் அவர்களின் விருப்பம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் மற்றும் முறையான ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்யவுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அந்த வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...