திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
பல்லடத்தில் இருந்து தாராபுரத்துக்கு கோழி தீவனங்களை ஏற்றிச் சென்ற வேன் கள்ளக்கிணறு அடுத்த மாதப்பூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தாராபுத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார், வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோவை சேரன் நகரைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மனைவி பத்மாவதி (70) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவர் ஜெகதீஸ் (78), அறிவழகன் (22) மற்றும் வேனில் வந்த பல்லடம் வேலப்பன் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி (33), தங்கராஜ் (40), நாராயணசாமி (37) ஆகிய 5 பேரும் பலத்த படுகாயம் அடைந்தனர்.

இதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுவிகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் பல்லடம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயகன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடத்தில் இருந்து தாராபுரத்துக்கு கோழி தீவனங்களை ஏற்றிச் சென்ற வேன் கள்ளக்கிணறு அடுத்த மாதப்பூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தாராபுத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார், வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோவை சேரன் நகரைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மனைவி பத்மாவதி (70) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவர் ஜெகதீஸ் (78), அறிவழகன் (22) மற்றும் வேனில் வந்த பல்லடம் வேலப்பன் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி (33), தங்கராஜ் (40), நாராயணசாமி (37) ஆகிய 5 பேரும் பலத்த படுகாயம் அடைந்தனர்.

இதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுவிகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் பல்லடம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயகன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
