கார் - வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலி: 5 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர். 

பல்லடத்தில் இருந்து தாராபுரத்துக்கு கோழி தீவனங்களை ஏற்றிச் சென்ற வேன் கள்ளக்கிணறு அடுத்த மாதப்பூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தாராபுத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார், வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோவை சேரன் நகரைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மனைவி பத்மாவதி (70) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவர் ஜெகதீஸ் (78), அறிவழகன் (22) மற்றும் வேனில் வந்த பல்லடம் வேலப்பன் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி (33), தங்கராஜ் (40), நாராயணசாமி (37) ஆகிய 5 பேரும் பலத்த படுகாயம் அடைந்தனர்.



இதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுவிகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் பல்லடம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயகன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...