கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நடிகர் கமலஹாசன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.,21) தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறார். அப்போது, கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “நாளை நமதே” பயணத்தில் இணைந்தவர்களை வரவேற்பது பற்றியும், மாநாட்டிற்கு வால்பாறையின் சார்பாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பு.கண்ணன் (வால்பாறை நகர பொறுப்பாளர்), சு.செந்தில்நாதன் (வால்பாறை நகர செயலாளர்), பு.ஜெபஸ்டீன் (வால்பாறை நகர பொருளாளர்), மு.அருண் (வால்பாறை துணை செயலாளர்), ரஞ்சித்குமார், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நம் நகர்புறங்களை தூய்மையாக வைப்பது போன்ற நலத்திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நடிகர் கமலஹாசன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.,21) தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறார். அப்போது, கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “நாளை நமதே” பயணத்தில் இணைந்தவர்களை வரவேற்பது பற்றியும், மாநாட்டிற்கு வால்பாறையின் சார்பாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பு.கண்ணன் (வால்பாறை நகர பொறுப்பாளர்), சு.செந்தில்நாதன் (வால்பாறை நகர செயலாளர்), பு.ஜெபஸ்டீன் (வால்பாறை நகர பொருளாளர்), மு.அருண் (வால்பாறை துணை செயலாளர்), ரஞ்சித்குமார், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நம் நகர்புறங்களை தூய்மையாக வைப்பது போன்ற நலத்திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
