வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

நடிகர் கமலஹாசன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.,21) தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறார். அப்போது, கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “நாளை நமதே” பயணத்தில் இணைந்தவர்களை வரவேற்பது பற்றியும், மாநாட்டிற்கு வால்பாறையின் சார்பாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இக்கூட்டத்திற்கு பு.கண்ணன் (வால்பாறை நகர பொறுப்பாளர்), சு.செந்தில்நாதன் (வால்பாறை நகர செயலாளர்), பு.ஜெபஸ்டீன் (வால்பாறை நகர பொருளாளர்), மு.அருண் (வால்பாறை துணை செயலாளர்), ரஞ்சித்குமார், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நம் நகர்புறங்களை தூய்மையாக வைப்பது போன்ற நலத்திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...