கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைக்கூட்டங்கள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடுகிறது. அதுமட்டுமில்லாமல், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்துகிறது. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பகல் நேரங்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ஊழியர்கள் பீதி உடனேயே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைக்கூட்டங்கள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடுகிறது. அதுமட்டுமில்லாமல், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்துகிறது. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பகல் நேரங்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ஊழியர்கள் பீதி உடனேயே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.