கோவை, சென்னை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கோவை, சென்னை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 318 பள்ளிகளில் ஏக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நிறுவனத்தின் உதவியுடன் இலவச வை-பை வசதி செய்வதற்கான உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது. இதில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரும், ஏக்ட் ஃபைபர்நெட் நிறுவனத்தின் சார்பில் பாலமல்லாடி, நாராயணன், சுனில் யாஜ்மன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி மார்ச் முதல்வாரம் நிறைவடையும். கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுக்க இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 318 பள்ளிகளில் ஏக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நிறுவனத்தின் உதவியுடன் இலவச வை-பை வசதி செய்வதற்கான உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது. இதில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரும், ஏக்ட் ஃபைபர்நெட் நிறுவனத்தின் சார்பில் பாலமல்லாடி, நாராயணன், சுனில் யாஜ்மன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி மார்ச் முதல்வாரம் நிறைவடையும். கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுக்க இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.