மினி ஆட்டோ மீது ​பஞ்சு லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிழப்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.


கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மினி ஆட்டோ மீது கழிவு பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

அன்னூரில் இருந்து தெக்கலூருக்கு ராஜேஷ்குமார் என்பவர் மினி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அதில், அன்னூரை சேர்ந்த ராமன் என்பவரும் பயணித்தார். ஆட்டோவை காடுவெட்டிபாளையம் அருகே நிறுத்தி இருவரும் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாவட்டம் அன்னூருக்கு பல்லடத்தில் இருந்து கழிவு பஞ்சு ஏற்றி கொண்டு வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதினால், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மினி ஆட்டோவின் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் லாரியில் இருந்த கழிவு பஞ்சுகள் ஆட்டோவின் மீது சரிந்தது. அதில், சிக்கி ஒட்டுநர் ராஜேஷ்குமார் மற்றும் அதில் சென்ற ராமன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரியில் இருந்த ஜந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் அந்த சாலை வழியே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பஞ்சு பேல் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த அன்னூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் விபத்து குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...