மினி ஆட்டோ மீது ​பஞ்சு லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிழப்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.


கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மினி ஆட்டோ மீது கழிவு பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

அன்னூரில் இருந்து தெக்கலூருக்கு ராஜேஷ்குமார் என்பவர் மினி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அதில், அன்னூரை சேர்ந்த ராமன் என்பவரும் பயணித்தார். ஆட்டோவை காடுவெட்டிபாளையம் அருகே நிறுத்தி இருவரும் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாவட்டம் அன்னூருக்கு பல்லடத்தில் இருந்து கழிவு பஞ்சு ஏற்றி கொண்டு வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதினால், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மினி ஆட்டோவின் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் லாரியில் இருந்த கழிவு பஞ்சுகள் ஆட்டோவின் மீது சரிந்தது. அதில், சிக்கி ஒட்டுநர் ராஜேஷ்குமார் மற்றும் அதில் சென்ற ராமன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரியில் இருந்த ஜந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் அந்த சாலை வழியே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பஞ்சு பேல் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த அன்னூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் விபத்து குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...