சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது வரை...!
• 2017 பிப்ரவரியில், சென்னை முகலிவாக்கம் அருகே, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி மாயமானார்.
* சிசிடிவி காட்சிகளை வைத்து அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

* விசாரணையில் ஹாசினியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார் தஷ்வந்த்.
* சம்பவத்தின்போது, ஹாசினி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி தஷ்வந்த் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

* ஹாசினியின் உடலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார் தஷ்வந்த்.
* இதையடுத்து தஷ்வந்த கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
* தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
* தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 3 மாதத்துக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

* ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் குன்றத்தூரில் வசித்து வந்த பெற்றோருடன் தங்கியிருந்தார்.
* இந்நிலையில், 2017 டிசம்பரில் தஷ்வந்தின் தாயார் சரளா கொலை செய்யப்பட்டார். மேலும், நகைகள் கொள்ளை போயிருந்தது.
* போலீசார் விசாரணையில் நகைக்காக பெற்ற தாயை தஷ்வந்த கொன்றது தெரியவந்தது.

* இதையடுத்து, மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
* அப்போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
* தப்பிய தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர், தாய் சரளாவை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

* செங்கல்பட்டு நீதிமன்றத்தில், ஹாசினி கொலை வழக்கின் விசாரணை முடிவுற்றதை அடுத்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
• போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்
• குற்றவாளி தஷ்வந்த்துக்கு எதிராக ஆள்கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பதிவு
• குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போக்ஸோ) சட்டத்தில் 4 பிரிவுகளில் குற்றம் நிரூபணம்
• குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்

• கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு மொத்தம் 31 ஆண்டுகளும் தண்டனை : வழக்கறிஞர் கண்ணதாசன்
• தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் : கண்ணதாசன்
• தீர்ப்பைக் கேட்டு, சிறுமியின் புகைப்படத்தை செல்போனில் பார்த்தபடி, கண்ணீர் விட்டு கதறி அழுத ஹாசினியின் தந்தை பாபு
• தனது மகள் கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைத்துள்ளதாக சிறுமியின் தந்தை பேட்டி
• தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனுக்கு ஆதரவாக மக்கள் முழக்கம்.
* சிசிடிவி காட்சிகளை வைத்து அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

* விசாரணையில் ஹாசினியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார் தஷ்வந்த்.
* சம்பவத்தின்போது, ஹாசினி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி தஷ்வந்த் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

* ஹாசினியின் உடலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார் தஷ்வந்த்.
* இதையடுத்து தஷ்வந்த கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
* தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
* தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 3 மாதத்துக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

* ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் குன்றத்தூரில் வசித்து வந்த பெற்றோருடன் தங்கியிருந்தார்.
* இந்நிலையில், 2017 டிசம்பரில் தஷ்வந்தின் தாயார் சரளா கொலை செய்யப்பட்டார். மேலும், நகைகள் கொள்ளை போயிருந்தது.
* போலீசார் விசாரணையில் நகைக்காக பெற்ற தாயை தஷ்வந்த கொன்றது தெரியவந்தது.

* இதையடுத்து, மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
* அப்போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
* தப்பிய தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர், தாய் சரளாவை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

* செங்கல்பட்டு நீதிமன்றத்தில், ஹாசினி கொலை வழக்கின் விசாரணை முடிவுற்றதை அடுத்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
• போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்
• குற்றவாளி தஷ்வந்த்துக்கு எதிராக ஆள்கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பதிவு
• குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போக்ஸோ) சட்டத்தில் 4 பிரிவுகளில் குற்றம் நிரூபணம்
• குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்

• கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு மொத்தம் 31 ஆண்டுகளும் தண்டனை : வழக்கறிஞர் கண்ணதாசன்
• தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் : கண்ணதாசன்
• தீர்ப்பைக் கேட்டு, சிறுமியின் புகைப்படத்தை செல்போனில் பார்த்தபடி, கண்ணீர் விட்டு கதறி அழுத ஹாசினியின் தந்தை பாபு
• தனது மகள் கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைத்துள்ளதாக சிறுமியின் தந்தை பேட்டி
• தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனுக்கு ஆதரவாக மக்கள் முழக்கம்.