இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை : இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை சோளக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் பாதைகளில் அதிக குப்பைகள் சேர்வதாக வந்த தகவலையடுத்து இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் வனத்துறையுடன் இணைந்து இன்று அப்பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வனப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும், பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகளால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்கைப் பற்றியும் வனத்துறையினர் விவரித்தனர்.
இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் பிரசாத் கூறுகையில், " நகர்ப்புற மக்களின் அறியாமை வன உயிரினங்களுக்குத் தீங்காக அமையும். இந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துண்டுகள் வீசிவிட்டு செல்கின்றனர். இது வன உயிரினங்களைப் பாதிக்கிறது. ரயில்வே பாதையை தூய்மைப்படுத்துவதும். காடுகளை பாதுகாப்பதுவும் அத்தியாவசியமான ஒன்றாகும்." என்றார்.

கோவை சோளக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் பாதைகளில் அதிக குப்பைகள் சேர்வதாக வந்த தகவலையடுத்து இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் வனத்துறையுடன் இணைந்து இன்று அப்பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வனப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும், பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகளால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்கைப் பற்றியும் வனத்துறையினர் விவரித்தனர்.
இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் பிரசாத் கூறுகையில், " நகர்ப்புற மக்களின் அறியாமை வன உயிரினங்களுக்குத் தீங்காக அமையும். இந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துண்டுகள் வீசிவிட்டு செல்கின்றனர். இது வன உயிரினங்களைப் பாதிக்கிறது. ரயில்வே பாதையை தூய்மைப்படுத்துவதும். காடுகளை பாதுகாப்பதுவும் அத்தியாவசியமான ஒன்றாகும்." என்றார்.