வாளையார் அருகே ரயில் பாதையை சுத்தப்படுத்திய தன்னார்வலர்கள்

இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை : இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் இணைந்து இன்று மதுக்கரையை அடுத்த சோளக்கரை பகுதியில் ரயில் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 



கோவை சோளக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் பாதைகளில் அதிக குப்பைகள் சேர்வதாக வந்த தகவலையடுத்து இந்திய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் எல் & டி ஊழியர்கள் வனத்துறையுடன் இணைந்து இன்று அப்பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 

60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வனப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும், பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகளால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்கைப் பற்றியும் வனத்துறையினர் விவரித்தனர். 

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் பிரசாத் கூறுகையில், " நகர்ப்புற மக்களின் அறியாமை வன உயிரினங்களுக்குத் தீங்காக அமையும். இந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துண்டுகள் வீசிவிட்டு செல்கின்றனர். இது வன உயிரினங்களைப் பாதிக்கிறது. ரயில்வே பாதையை தூய்மைப்படுத்துவதும். காடுகளை பாதுகாப்பதுவும் அத்தியாவசியமான ஒன்றாகும்." என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...