ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது.
கோவை : ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது.

கோவையைச் சேர்ந்த கோப்ரா பிரதீப் குமார் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இது குறித்து பிரதீப்குமார் கூறுகையில், " ரஜினி ரசிகன் என்ற அடிப்படையில் இந்த முகாமை தானாக முன்வந்து நடத்தி வருகிறேன்.
கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரஜினி மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை செய்து வரும் சேம் ஆண்ட்ரூஸ் என்பவரும் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளார். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்பவர்களின் பெயர், வயது, ஊரின் விபரம், மன்றத்தில் இணைவதற்கான காரணம், ஏற்கனவே வேறெதுவும் கட்சியில் உள்ள விபரம் என பல்வேறு தகவல்கள் கேட்டுள்ள உறுப்பினர் படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்துள்ள படிவங்கள் ரஜினியிடம் கொண்டு செல்லப்படும். இணையத்தளம் மூலமாகவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினராகலாம்." என்றார்.

கோவையைச் சேர்ந்த கோப்ரா பிரதீப் குமார் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இது குறித்து பிரதீப்குமார் கூறுகையில், " ரஜினி ரசிகன் என்ற அடிப்படையில் இந்த முகாமை தானாக முன்வந்து நடத்தி வருகிறேன்.
கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரஜினி மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை செய்து வரும் சேம் ஆண்ட்ரூஸ் என்பவரும் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளார். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்பவர்களின் பெயர், வயது, ஊரின் விபரம், மன்றத்தில் இணைவதற்கான காரணம், ஏற்கனவே வேறெதுவும் கட்சியில் உள்ள விபரம் என பல்வேறு தகவல்கள் கேட்டுள்ள உறுப்பினர் படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்துள்ள படிவங்கள் ரஜினியிடம் கொண்டு செல்லப்படும். இணையத்தளம் மூலமாகவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினராகலாம்." என்றார்.