ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கோவை: ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்கும் ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் விளையாடி, அதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 போட்டிக்குத் தகுதி பெறும். சென்னை அணிக்கு கோவை வ.ஊ.சி உள்விளையாட்டு அரங்கம் சொந்த மைதானமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணி தனது 17-வது லீக் ஆட்டத்தில், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய சென்னை அணியினரின் ஆட்டத்திற்கு, கோவா வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. போட்டியின் 26-வது நிமிடத்தில் சென்னை அணியின் அலெக்ஸாண்டர் ராகிக் செர்பியா முதல் கோலை அடித்தார். இதனால், உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அடங்குவதற்குள், கேப்டன் சூசைராஜ் 28-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் சென்னை அணியின் கேப்டன் சூசைராஜ் மீண்டும் ஒருகோலை அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்ததால், ரசிகர்கள் ஆராவாரத்துடன் காணப்பட்டனர். இறுதியில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் போது 91-வது நிமிடத்தில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் கேப்டன் ஒகி மாண்டே ஆறுதல் கோலடித்தார். முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சொந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி, 5 டிரா) முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்கும் ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் விளையாடி, அதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 போட்டிக்குத் தகுதி பெறும். சென்னை அணிக்கு கோவை வ.ஊ.சி உள்விளையாட்டு அரங்கம் சொந்த மைதானமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணி தனது 17-வது லீக் ஆட்டத்தில், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய சென்னை அணியினரின் ஆட்டத்திற்கு, கோவா வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. போட்டியின் 26-வது நிமிடத்தில் சென்னை அணியின் அலெக்ஸாண்டர் ராகிக் செர்பியா முதல் கோலை அடித்தார். இதனால், உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அடங்குவதற்குள், கேப்டன் சூசைராஜ் 28-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் சென்னை அணியின் கேப்டன் சூசைராஜ் மீண்டும் ஒருகோலை அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்ததால், ரசிகர்கள் ஆராவாரத்துடன் காணப்பட்டனர். இறுதியில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் போது 91-வது நிமிடத்தில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் கேப்டன் ஒகி மாண்டே ஆறுதல் கோலடித்தார். முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சொந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி, 5 டிரா) முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.