சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை சுவைத்தது சென்னை எப்.சி.

ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கோவை: ஐ லீக் கால்பந்து போட்டியில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்மழை பொழிந்ததன் மூலம் சென்னை அணி, சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்கும் ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் விளையாடி, அதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 போட்டிக்குத் தகுதி பெறும். சென்னை அணிக்கு கோவை வ.ஊ.சி உள்விளையாட்டு அரங்கம் சொந்த மைதானமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணி தனது 17-வது லீக் ஆட்டத்தில், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியை எதிர்கொண்டது.

ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய சென்னை அணியினரின் ஆட்டத்திற்கு, கோவா வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. போட்டியின் 26-வது நிமிடத்தில் சென்னை அணியின் அலெக்ஸாண்டர் ராகிக் செர்பியா முதல் கோலை அடித்தார். இதனால், உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அடங்குவதற்குள், கேப்டன் சூசைராஜ் 28-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து, 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் சென்னை அணியின் கேப்டன் சூசைராஜ் மீண்டும் ஒருகோலை அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்ததால், ரசிகர்கள் ஆராவாரத்துடன் காணப்பட்டனர். இறுதியில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் போது 91-வது நிமிடத்தில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் கேப்டன் ஒகி மாண்டே ஆறுதல் கோலடித்தார். முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சொந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி, 5 டிரா) முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...