திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் இறுதிகட்ட ஆய்வு

திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.



பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மேலும், ஒரேநேரத்தில் சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மற்றும் இருபுறமும் தடுப்பு வேலிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்துள்ளன. இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் விலங்குகள் நல அலுவலர் மிட்டல் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.



இதனிடையே, நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 720 மாடுகள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 9 சுற்றாக நடைபெறும் என்றும், மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தமிழகத்தில் எங்கும் இதுவரை கொடுக்காத பரிசுகள் கொடுக்கப்படும் எனக் கூறினார்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...