திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் இறுதிகட்ட ஆய்வு

திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.



பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மேலும், ஒரேநேரத்தில் சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மற்றும் இருபுறமும் தடுப்பு வேலிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்துள்ளன. இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் விலங்குகள் நல அலுவலர் மிட்டல் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.



இதனிடையே, நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 720 மாடுகள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 9 சுற்றாக நடைபெறும் என்றும், மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தமிழகத்தில் எங்கும் இதுவரை கொடுக்காத பரிசுகள் கொடுக்கப்படும் எனக் கூறினார்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...