காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உள்ள கர்நாடக கூட்டமைப்பு கட்டிடத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை: காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உள்ள கர்நாடக கூட்டமைப்பு கட்டிடத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவிரி நதி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் நீரில் 14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்து அப்பகுதியில் உள்ள கர்நாடகா கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தை முற்றுகையிட முயன்றனர்.

காவல் துறையினரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் கர்நாடகாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும், இத்தீர்ப்பை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டம் நடத்திய 20 க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவிரி நதி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் நீரில் 14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்து அப்பகுதியில் உள்ள கர்நாடகா கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தை முற்றுகையிட முயன்றனர்.

காவல் துறையினரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் கர்நாடகாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும், இத்தீர்ப்பை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டம் நடத்திய 20 க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.