மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா..?

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர்: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார். 



 

மங்களம் சாலையில் உள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மனு வாங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள்நல ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனு பெற்றனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் துணைத்தலைவர் முருகன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அறிவித்து வழங்கியுள்ள நலத்திட்டங்கள் சரியான முறையில் அவர்களை சென்றடைகிறதா என தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் ஆணையம் கண்காணித்து வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இறந்தவர்களில் இரண்டுபேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...