கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கட்டிட விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கட்டிட விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் 15 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், விபத்து நடந்தப் பகுதியில் அமைச்சர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் 15 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், விபத்து நடந்தப் பகுதியில் அமைச்சர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.