திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அங்கேரிபாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் கே.ஜி. நகரில் நைஜீரியர்கள் ஒருசிலர் பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாகவும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து. மாநகர போலீஸ் ஆணையர் நாகராஜன் உத்தரவின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன்பாபு தலைமையில் போலீசார் நைஜீரியர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், அந்த வீட்டில் தங்கியிருந்த 6 நைஜீரியர்களை அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நுவான்க்பே ஒனேகாக் (31), நிக்கோலஸ் உச்சேனா யூசிப் (38), ஒனாஜிடே (31), நெல்சன் ஓ பேக்போ (32), நுவோனு ஓ க்வூடி (34), டாய் டினேபில்சி (35) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்போட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் ஸ்ரீநகர் பகுதியில் தங்கி பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த 6 பேரிடமும் அவர்களுடைய சொந்த நாட்டில் வழங்கப்பட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. இதையடுத்து, 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்பு சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதேபோல, திருப்பூர் ராயபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் (30), ஜான்சன் (32) ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கேரிபாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் கே.ஜி. நகரில் நைஜீரியர்கள் ஒருசிலர் பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாகவும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து. மாநகர போலீஸ் ஆணையர் நாகராஜன் உத்தரவின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன்பாபு தலைமையில் போலீசார் நைஜீரியர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், அந்த வீட்டில் தங்கியிருந்த 6 நைஜீரியர்களை அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நுவான்க்பே ஒனேகாக் (31), நிக்கோலஸ் உச்சேனா யூசிப் (38), ஒனாஜிடே (31), நெல்சன் ஓ பேக்போ (32), நுவோனு ஓ க்வூடி (34), டாய் டினேபில்சி (35) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்போட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் ஸ்ரீநகர் பகுதியில் தங்கி பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த 6 பேரிடமும் அவர்களுடைய சொந்த நாட்டில் வழங்கப்பட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. இதையடுத்து, 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்பு சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதேபோல, திருப்பூர் ராயபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் (30), ஜான்சன் (32) ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.