ரயில்வேத்துறையில் டிரேக்மேனுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்க முடிவு

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் ரயில்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேன், ரயில் வருவதை அறிய முடியாமல் படும் இன்னல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில்,  டிரேக்மேன்களுக்கு ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

அதாவது, ரக்ஷாக் எனப்படும் வாக்கி - டாக்கிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எல்.இ.டி.யின் மூலம் தகவலின் பேரில், தண்டவாளத்தில் இருந்து டிரேக்மேன்கள் விலகிச் செல்ல முடியும். மேலும், பிரத்யேக காலணிகள், கையுறைகள், ரெயின் கோட் (rain coat), குளிர் ஜாக்கெட் மற்றும் பல உபகரணங்களை வழங்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த ரக்ஷாக் கருவியானது தெற்கு மத்திய ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. 

இதனிடையே, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஆடை பராமரிப்புகளுக்காக டிரேக்மேனுக்கு ஆண்டுதோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...