மேட்டுப்பாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி 6-வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி 6-வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகா-அர்ஜூனன் தம்பதியினர். இவர்களுக்கு அகிலாண்டேஸ்வரி (6) என்ற பெண் குழந்தை இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வரக்கூறி சிகிச்சை அளித்து வந்தனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலோயில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.

"சிறுமி உயிரிழப்புக்கு தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடே காரணம்" என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இனியாவது நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உரிய சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகா-அர்ஜூனன் தம்பதியினர். இவர்களுக்கு அகிலாண்டேஸ்வரி (6) என்ற பெண் குழந்தை இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வரக்கூறி சிகிச்சை அளித்து வந்தனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலோயில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.

"சிறுமி உயிரிழப்புக்கு தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடே காரணம்" என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இனியாவது நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உரிய சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
