மலேசியாவில் நடந்த யோகா போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோவை மாணவி

கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

கோவை : கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.



ஜனவரி மாதம் நடைபெற்ற இப்போட்டியில் ஆசியா கண்டத்தை சேர்ந்த இந்திய, மலேசியா, சிங்கப்பூர், இண்டொனேசியா, ஹாங்காங், ரசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். அதில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 

கோவை அடுத்த சோமனூர் பகுதியை சார்ந்த தனியார் பள்ளி மாணவி வைஷ்ணவி (14), கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று 2015 மற்றும் 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் ஆப் யோகா, ஒவர் ஆல் கோல்டு போன்ற பதங்கங்களையும் வென்றுள்ளார். அதேபோல, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்று பலநூறு பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து வைஷ்ணவி கூறுகையில், "9 வயது முதல் யோகா செய்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் விளையாட்டு பிரிவில் யோகா பயில ஆரம்பித்தேன். பின்னர், அது பிடித்துப்போய் முழுவதுமாக யோகா போட்டிகளில் மாவட்டம், மாநிலம், தேசம், சர்வேதேசம் என கலந்துகொள்ள ஆரம்பித்தேன். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. ஒவ்வொரு மாணவரின் தனிதிறமையும் ஊக்குவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளை எடுத்தால் அனைவரும் வெற்றியடைய முடியும். எனது இந்த முயற்சிக்கு என் பெற்றோர் மற்றும் பள்ளி நீர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது, " என்றார்.

தனியார் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வைஷ்ணவியின் தந்தை சரவணக்குமார் கூறுகையில், "திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும்.படித்தால் வாழ்க்கையில் முன்னரே மட்டும்தான் முடியும். ஆனால் திறமைகளை வெளிப்படுத்தி அதில் வெற்றியடைந்தால் மட்டுமே இந்த உலகம் நம்மலை திரும்பி பார்க்கும். திறமை உள்ள மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்,"என்றார்.

வைஷ்ணவி சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்க அவரது பள்ளியான பார்க் குளோபல் மிகவும் உறுதுனையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...