”எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான முடிவை தெரிவிக்க வேண்டும்”

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடம் தொடர்பாக தமிழக அரசு தெளிவான முடிவை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை : எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடம் தொடர்பாக தமிழக அரசு தெளிவான முடிவை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் 1988 கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் நடைபெற்றது. 20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கொச்சின் சிப் யார்டு பகுதியில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை, ஆய்வு பணிகள், இழப்பீடு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக விரிவாக விளக்கினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், எடப்பாடி அரசு ஒராண்டை நிறைவு செய்ததே சாதனை. இக்கட்டான சூழ்நிலையில் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். சுப. உதயகுமாருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டிஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பொது மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். தமிழக அரசு சுப. உதயகுமாரிடம் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கிழக்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் வளர்ச்சி என்பது இல்லை. மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும். 

கோவில்களில் லாபத்திற்காக புதிய வழிபாட்டு முறைகளை அரசு கொண்டு வருகின்றனர். கோவில்களை சந்தையாக மாற்ற அரசாங்கத்திற்கு யார் அனுமதி அளித்தது..?. மத்திய அரசாங்கம் கொடுக்கும் நிதியை கொடுக்க மாட்டோம் என மாநில அரசு சொன்னால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றவர்கள். 

முன்னதாக, அஞ்சலி நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக இல்லையென்றும், ஆட்சியில் உள்ளவர்கள் அதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், அடுத்தாண்டு அஞ்சலி கூட்டத்திற்காவது மாநில அரசு அனுமதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...