அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் வரும் 21-ம் தேதி மதுரை அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்தில் வைத்து தனது அரசியல் பயணத்தை துவங்குகிறார். இதையடுத்து, அவர் தனது நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமலஹாசன் கூறுகையில், நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் தற்போது இல்லை. தற்போது சபாஷ் நாயுடு, விஸ்வரூபம்-2, இந்தியன்-2 ஆகிய படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளேன். மேலும், ஒரு படத்திற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. முழு அரசியலுக்கு வந்த பிறகே நடிப்பிற்கு முடிந்த முழுக்கு போடுவது பற்றி யோசிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
நடிகர் கமலஹாசன் வரும் 21-ம் தேதி மதுரை அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்தில் வைத்து தனது அரசியல் பயணத்தை துவங்குகிறார். இதையடுத்து, அவர் தனது நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமலஹாசன் கூறுகையில், நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் தற்போது இல்லை. தற்போது சபாஷ் நாயுடு, விஸ்வரூபம்-2, இந்தியன்-2 ஆகிய படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளேன். மேலும், ஒரு படத்திற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. முழு அரசியலுக்கு வந்த பிறகே நடிப்பிற்கு முடிந்த முழுக்கு போடுவது பற்றி யோசிக்கப்படும். இவ்வாறு கூறினார்.