"முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் தமிழகத்திற்கு அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு''

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிவிட்டது. தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடன் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த ஒராண்டு ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதலமைச்சராக்குவோம் எனக் கூறிய வைகோ, தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தனது நோக்கம் எனக்கூறியிருப்பது தொடர்பாக நீங்கள் வைகோவிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும், தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ஒவ்வொருவர் கருத்திற்கும் பதில் சொல்ல முடியாது என்றும், மதத்தால் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதே தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு என்றார். ஆட்சியாளர்கள் ஊழல் செய்து சுமையை மக்கள் மீது திணிப்பதாகவும், இதனால் நாடும், மக்களும் கடனில் உள்ளதாக அவர் கூறினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...