வால்பாறையில் சிக்கிய சிறுத்தையை வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்

கோவை மாவட்டம் வால்பாறையில் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். 



வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் கடந்த 8-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முத்தலி என்பவரின் 4 வயது மகன் செய்துலை சிறுத்தைப்புலி இழுத்துச் சென்று கொன்றது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குழந்தையை கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுவனை தாக்கிக் கொன்ற சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

நடுமலை எஸ்டேட் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் ஒரு கூண்டும், வால்பாறை சி.எஸ்.ஐ. ஆலயம் அருகாமையில் ஒரு கூண்டும், வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நல்லகாத்து சாலையில் ஒரு கூண்டும், காமராஜர் நகர் பகுதியில் ஒரு கூண்டும் என நான்கு கூண்டுகள் வைத்து 4 கேமராக்கள் பொருத்தி இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனை தாக்கிக் கொன்ற சிறுத்தைப்புலி நடுமலை எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் சிக்கியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். உடனே மாவட்ட வன அலுவலர் முகமது மனாப் (பொறுப்பு), வனத்துறை அதிகாரிகள் சக்திவேல் மற்றும் சேகர், ஓய்வுபெற்ற வனஅலுவலர் தங்கராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் சிறுத்தை பிடிபட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், ஓய்வு பெற்ற வனஅலுவலர் தங்கராஜ் பிடிபட்ட சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறை வாகனத்தில் ஏற்றினர். நடுமலை எஸ்டேட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் என்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் பிடிபட்ட சிறுத்தைப்புலியை கொண்டு சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...