கோவையில் இன்று கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் காதலர் தினத்தை கொண்டாடினர்.
கோவை: கோவையில் இன்று கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் காதலர் தினத்தை கொண்டாடினர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சாதி, மதங்களை ஒழிக்கும் கருவி காதல் என்றும், காதலும், வீரமும் தமிழர்களின் பண்பாடு என்றும் கூறிய அவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சாதி அற்றோர் என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சாதி, மதங்களை ஒழிக்கும் கருவி காதல் என்றும், காதலும், வீரமும் தமிழர்களின் பண்பாடு என்றும் கூறிய அவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சாதி அற்றோர் என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.