மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணியம்மாள். இந்த மூதாட்டி தனது மகன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் வேலைக்கு சென்று விட வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். 

இது தொடர்பாக, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகிலிருந்த நிறுவனங்களில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்புக் காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.  மேலும், பேருந்து நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அடகு கடையில் கோவையைச் சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர் செயினை அடகு வைக்க வந்தார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...