சேஞ்ச் அறக்கட்டளையுடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

சேஞ்ச் டிரஸ்ட் (Change trust) மற்றும் ரோட்டரி மெட்ரோ பாலிஸ் (Rotary Metro polis) சார்பாக கோவை அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்துதல், ரத்த தானம் வழங்குதல் மற்றும் மரக் கன்றுகள் நடவு செய்தல் ஆகிய பணிகளில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன், இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சியில் விஜய கார்த்திகேயன் பேசுகையில், "மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் இதோடு சேவையை நிறுத்திவிடக்கூடாது. 



நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன் உதாரணமாக ரத்தம் தானம் தேவைப்படுபவர்களுக்காக ரத்த தான செயலி ஒன்றை கோவை மாநகராட்சி சார்பில் உருவாக்க உள்ளோம்," என்றார்.

சேஞ்ச் டிரஸ்ட் நிறுவனர் தஸ்லிமா நஸ்ரின் கூறுகையில், "மாணவர்களை சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வருங்காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளாக வரும் போது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மாணவர்களிடத்தில் உருவாகும்," என்றார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரோட்டரி மெட்ரோபாலிஸ் சார்பாக அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கை விரிப்புகளும், 70 குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...