சிறுவனைக் கொன்ற சிறுத்தைப்புலி சிக்கியது

வால்பாறை பகுதியில் சிறுவனைக் கொன்ற சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் சிறுவனைக் கொன்ற சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் கடந்த வாரம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முத்தலி என்பவரின் 4 வயது மகன் செய்துல் என்பவரை சிறுத்தைப்புலி இழுத்துச் சென்றது. 

வெகுநேரம் குழந்தையை காணாத பெற்றோர்களுடன் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வனத்துறையினரும் சேர்ந்து சுமார் 2 மணிநேரங்களுக்கும் மேலாக தேடினர். அப்போது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேயிலைச் செடிக்குள் தலை வேறு உடல் வேறாக குழந்தை இறந்து கிடப்பதை தெரியவந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இறந்த குழந்தையின் உடலை எடுக்க விடாமல் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே உடலை எடுக்க விடுவோம் என்று கூறி தொடர்ந்து குழந்தையின் உடலை எடுக்க மறுத்தனர். 

தொடர்ந்து அங்கு வந்த வால்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் சமரச பேச்சுவார்த்தை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பேரில் இறந்த குழந்தையின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்குப் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் வால்பாறை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு குழந்தையை கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தைப்புலியைப் பிடிப்பதற்கு 4 இடங்களில் கூண்டுகள் வைத்தனர். அதன்படி, நடுமலை எஸ்டேட் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் ஒரு கூண்டும், ரூபவ் வால்பாறை உள்ள ஆலயம் அருகில் ஒரு கூண்டும், வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நல்லகாத்து சாலையில் ஒரு கூண்டும், காமராஜர் நகர் பகுதியில் ஒரு கூண்டும் என நான்கு கூண்டுகள் வைத்து 4 கேமராக்கள் பொருத்து இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தைப்புலி நடுமலை எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் சிக்கியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். இருப்பினும் இதுபோன்று மேலும் சில சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதாகவும், இந்த சிறுத்தைகளையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...