தமிழகம் முழுவதும் கோயில்களில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கோயில்களில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :- பெரிய கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அகற்றிட வேண்டும். ஒதுக்கப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
பெரிய கோயில்களில் அமைந்துள்ள புராதன சிற்பங்கள், கட்டுமானங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும். பெரிய கோயில் வளாகங்களின் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :- பெரிய கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அகற்றிட வேண்டும். ஒதுக்கப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
பெரிய கோயில்களில் அமைந்துள்ள புராதன சிற்பங்கள், கட்டுமானங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும். பெரிய கோயில் வளாகங்களின் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.