வாட்ஸ்-ஆப்பினால் வாடிப்போன ரோஜா பூ விற்பனை

சமூக வலைதளங்களால் காதலர் தினத்தன்று அமோகமாக விற்பனையாகும் ரோஜா மலர்கள் தேக்கமடைந்திருப்பதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை : உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காதலைக் கொண்டாடும் இந்நாளில், விருப்பமானவர்களுக்கு ரோஜா மலரை அன்பளிப்பாக கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்துக் கொள்வது வழக்கம்.



 

ஒவ்வொரு காதலர் தினத்திலும் மனதைக்கவரும் சிகப்பு ரோஜாக்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலர் தினத்தன்று ரோஜா பூக்களை வாங்கி பரிசளிப்போர் எண்ணிக்கை குறைந்து கொண்டேவருகிறது.

விலை வாசி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, எரிபொருள் விலை ஏற்றம், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ரோஜாப்பூக்களின் விலை அதிகரித்து அதன் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்றைய இளைஞர்கள் காதலை பரிமாறிக்கொள்ள வாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையே உபயோகிப்பதாக ரோஜாப்பூ விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து 'தி ஊட்டி ஃப்ளவர் ஷாப்'-ன் உரிமையாளர் கே.ஜெயந்த் குமார் கூறுகையில், " ஐந்து வருடங்களுக்கு முன், காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ரோஜாப்பூ விற்பனை தொடங்கிவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவற்றின் விற்பனை சரிவு நிலையில் உள்ளது.

இன்றைய இளைஞர்கள் காதலை பரிமாறிக்கொள்வதற்குப் பூக்களை விட, செல்போன்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், புதுமண தம்பதிகளும், காதலித்து மணமுடித்தவர்களும், ரோஜாப்பூக்களை அதிகம் வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்காக, ரூ.500  முதல் ரூ.5௦௦௦ வரையில் பூங்கொத்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த பூங்கொத்துக்கள் வாங்குபவரின் விருப்பத்திற்கேற்ப சிறப்பான முறையில் வடிவமைத்தும் கொடுக்கப்படுகிறது." என்றார். 



"தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உறவுகளுக்குள் ஏற்படும் இடைவெளியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாழ்த்து செய்தி முதல் துயர செய்தி வரை அனைத்தையும் ஒற்றை நொடியில் சொடுக்கி விட்டு, அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிடுகிறோம். இதனால்தான், கடிதம் எழுதுவது, வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்வது போன்ற பழக்கங்கள் காணாமல் போய்விட்டன.

 

தொடுதிரையோடு வாழும் இந்த வாழ்க்கை முறை, பல மனச்சிக்கல்களை உண்டாக்கும். வருடத்தில், ஒரு நாளாவது செல்போன்களை கழட்டிவிட்டு, கைகளில் ரோஜாப்பூக்களோடு காதலனின் கைபிடித்து நடக்க முயற்சி செய்ய வேண்டும்" என்கிறார் உளவியல் துறை இறுதி ஆண்டு மாணவி இலக்கியா.



ஊட்டி, பெங்களூர் மற்றும் ஒசூர் போன்ற நகரங்களிலிருந்து கொண்டுவரப்படும், ரெட் ரோஸ், ரெட் கார்னேஷன் (ஏற்றுமதியாகும் ரோஜா) போன்றவை காதலர் தினத்தன்று அதிகம் விற்பனையாகும் வகைகள். சாதாரண நாட்களில் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகும் இந்த பூக்கள், இன்றும் நாளையும் ரூ.20 முதல் ரூ.40 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

"காதலைப் பரிமாறிக்கொள்ள தற்போது ஏராளமான வழிகள் வந்துவிட்டன. விதவிதமான புத்தாடைகள், விலை உயர்ந்த அணிகலன்கள், அழகிய பொம்மைகள், சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள் என ஏராளமான பொருள்களை விரும்பி வாங்கி தனக்கு விருப்பமானவர்களுக்குப்  பரிசளிக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஆனால், காதலர் தினத்தன்று பரிசாக வழங்கப்படும் எளிமையான, மெல்லிய சிகப்பு ரோஜாக்கள் மிகவும் சிறப்பானவை. அவை, காதலர்களுக்குள் இருக்கும் காதலை மேலும் மென்மையாக்கும்.  அந்த மலர்கள் இரண்டொரு நாட்களில் வாடிப்போனாலும், அது தந்த நினைவுகள் வாடாமல் மனதில் வாழ்பவை" என்றார் தனது பேரனோடு ரோஜாப்பூச்செண்டு வாங்கிச்சென்ற அறுபது வயது காதலன்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...