தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக நடிகர் கமலஹாசன் தேர்தல் ஆணையத்தில் நாளை மறுநாள் நேரம் கேட்டு உள்ளார்.
தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக நடிகர் கமலஹாசன் தேர்தல் ஆணையத்தில் நாளை மறுநாள் நேரம் கேட்டு உள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்தும், கமலஹாசனும் விரைவில் அரசியலில் களம் காண உள்ளனர். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடக்கிறது. நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிலையில், தனது கட்சியை பதிவு செய்வதற்காக நடிகர் கமலஹாசன் நாளை மறுநாள் (பிப்.,15) தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளார். அன்று தனது கட்சியின் பெயரை பதிவு செய்கிறார்.
நடிகர்கள் ரஜினிகாந்தும், கமலஹாசனும் விரைவில் அரசியலில் களம் காண உள்ளனர். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடக்கிறது. நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிலையில், தனது கட்சியை பதிவு செய்வதற்காக நடிகர் கமலஹாசன் நாளை மறுநாள் (பிப்.,15) தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளார். அன்று தனது கட்சியின் பெயரை பதிவு செய்கிறார்.