ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
கோவை: ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
பால் விற்பனை மற்றும் கொள்முதல் விலையை அதிகரித்தல் தொடர்பாக நேற்று தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " கோவை மாவட்ட விவசாயிகள் பலர் கால்நடைகளை வளர்த்து பால் கறந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தனியார் பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தீவனங்கள் கிடைக்க பெறுவதில் சிக்கல் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.20-லிருந்து ரூ.22 வரையும் தனியார் பால் வியாபாரிகள் ரூ.23-லிருந்து ரூ.25 வரையும் கொடுக்கின்றனர். சராசரியாக 1 லிட்டர் பாலின் உற்பத்திக்கு ரூ.20 ஆகும் நிலையில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேறவில்லை. மேலும் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும்." என்றார்.
தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
பால் விற்பனை மற்றும் கொள்முதல் விலையை அதிகரித்தல் தொடர்பாக நேற்று தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " கோவை மாவட்ட விவசாயிகள் பலர் கால்நடைகளை வளர்த்து பால் கறந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தனியார் பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தீவனங்கள் கிடைக்க பெறுவதில் சிக்கல் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.20-லிருந்து ரூ.22 வரையும் தனியார் பால் வியாபாரிகள் ரூ.23-லிருந்து ரூ.25 வரையும் கொடுக்கின்றனர். சராசரியாக 1 லிட்டர் பாலின் உற்பத்திக்கு ரூ.20 ஆகும் நிலையில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேறவில்லை. மேலும் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும்." என்றார்.
தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.