மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கியதில் ஆதிவாசி ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.



கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோபானாரி அரக்கடவு மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பன்(45). இவர் நேற்று வழக்கம் போல் விவசாய கூலி பணிக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். பணி முடித்து மாலை அரக்கடவுக்கு இரு கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை யானை ராஜப்பனை துரத்தியது. இதில் பீதி அடைந்த ராஜப்பன் காட்டுப்பாதை வழியாக ஓடினார். ஆனால், அவரை விடாமல் துரத்திய காட்டு யானை ராஜாப்பனை துதிக்கையால் தூக்கி வீசியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவு வெகு நேரம் ஆகியும் ராஜப்பன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் வனத்துறை உதவியுடன் காட்டுப்பகுதிக்குள் சென்று அவரைத் தேடிச் சென்றனர். அப்போது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரது உடலை இன்று காலை மீட்ட பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது யானைகள் வலசைக் காலம் நடைபெறுவதால் அவற்றின் நடமாட்டம் கோவை வனக்கோட்டத்தில் அதிக அளவில் இருந்து வருவதாகவும் கர்நாடகா மலைக்காடுகளில் இருந்து யானைகள் கேரளா வனத்தினை நோக்கி வருவதால் யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வனப்பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...