குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னோசன்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி : குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னோசன்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நீலகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் வகையிலும் குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது குழந்தை திருமணம் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை திருமணம் ஏற்பாடு செய்பவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மற்றும் பெண் வீட்டார், மணமகன் வீட்டார், குழந்தை திருமணம் என தெரிந்தும் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடிய திருமண மண்டப உரிமையாளர்கள், பத்திரிகை அச்சடித்து கொடுக்கும் அச்சக உரிமையாளர்கள், அந்த திருமணத்தில் கலந்து கொண்டோர் என அனைவரின் மீதும் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பிணையில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால் தாமதமின்றி சைல்டு லைன்-1098 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, குழந்தை திருமணத்தை தடுத்திட மக்கள் உதவிட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னோசன்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...