குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒற்றைச்சாளர வசதியமைப்புக் குழு நியமனம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்களை விரைந்து கிடைத்திட வழிவகை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒற்றைச்சாளர வசதியமைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவை : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்களை விரைந்து கிடைத்திட வழிவகை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒற்றைச்சாளர வசதியமைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, நகர் மற்றும் ஊரமைப்புத்துறையால் தொழில் வகைபாடு செய்யப்பட்ட இடங்களில், சொந்தமாகக் கட்டிடம் கட்டி, இயந்திரங்கள் நிறுவி புதிதாக ஆரம்பிக்கும் அல்லது விரிவாக்கம் செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உத்தேச வரைபட ஒப்புதல்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, மின் ஆய்வாளர் அலுவலகம் கொதிகலன் ஆய்வாளர் அலுவலகம், நகர் ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்டக் குழுமம் உள்ளாட்சி அமைப்புகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றின் உரிமங்கள் மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றை ஒற்றைச் சாளர முறையில் விரைந்து பெற்றுத்தர மாவட்ட அளவிலான ஒற்றைச்சாளர இடர்நீக்க வசதியமைப்புக்குழு கோவை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இக்குழு மாதத்திற்கு இருமுறை கூடி, மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்த அவசரச் சட்டத்தில் உரிமங்கள் பெற குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், தொடர்புடைய துறைகளின் உரிமங்கள்/ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்பட்டு, இக்குழு ஆணைப் பிறப்பிக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிமங்கள்/ஒப்புதல் வழங்காத துறைகள் மீது அதிகபட்சமாக ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், தவறான தகவல்கள் அளித்து உரிமங்கள் பெற விழையும் தொழில் நிறுவனத்திற்கு, முதல் நிகழ்வில் அதிகபட்சமாக ரூ. 15,000 வரையும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக ரூ.25,000 வரையும் அபராதம் விதிக்கப்படும். 

ஆகவே, தொழில்முனைவோர் இக்குழுவின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு, எளிதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்கி, அவற்றின் வாயிலாக தொழில் வளமும், பொருளாதார ஏற்றமும் பெற்று, வேலைவாய்ப்பைப் பெருக்க முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...