6 நாட்களுக்குப் பிறகு இறந்த குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை நிறைவு

நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி : நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 



மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.   

தொடர்ந்து, 6 நாட்களாக தாய் யானையில் பாசப் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், இறந்த தாய் யானையை விட்டு, தாய் யானை இன்று விலகிச் சென்றது. 6 நாட்களுக்குப் பிறகு மீட்கபட்ட இறந்த குட்டி யானையின் உடலுக்கு, வனசரகர் காந்தன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த குட்டி யானை இயற்கை முறையில் இறந்ததாகக் கால்நடை மருத்துவர் உமேஷ் தெரிவித்தார். 

இறந்து குட்டி யானையை விட்டுப் பிரியாமல் 5 நாட்களாக நீடித்த தாய் யானையின் பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...