நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
நீலகிரி : நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து, 6 நாட்களாக தாய் யானையில் பாசப் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், இறந்த தாய் யானையை விட்டு, தாய் யானை இன்று விலகிச் சென்றது. 6 நாட்களுக்குப் பிறகு மீட்கபட்ட இறந்த குட்டி யானையின் உடலுக்கு, வனசரகர் காந்தன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த குட்டி யானை இயற்கை முறையில் இறந்ததாகக் கால்நடை மருத்துவர் உமேஷ் தெரிவித்தார்.
இறந்து குட்டி யானையை விட்டுப் பிரியாமல் 5 நாட்களாக நீடித்த தாய் யானையின் பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது.

மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து, 6 நாட்களாக தாய் யானையில் பாசப் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், இறந்த தாய் யானையை விட்டு, தாய் யானை இன்று விலகிச் சென்றது. 6 நாட்களுக்குப் பிறகு மீட்கபட்ட இறந்த குட்டி யானையின் உடலுக்கு, வனசரகர் காந்தன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த குட்டி யானை இயற்கை முறையில் இறந்ததாகக் கால்நடை மருத்துவர் உமேஷ் தெரிவித்தார்.
இறந்து குட்டி யானையை விட்டுப் பிரியாமல் 5 நாட்களாக நீடித்த தாய் யானையின் பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது.