திருப்பூரில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் காந்திய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் : திருப்பூரில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் காந்திய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் பேருந்துகளின் டிக்கெட் விலையை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், டிக்கெட் விலையை உயர்த்திய மாநில அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும் காந்திய மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் பேருந்துகளின் டிக்கெட் விலையை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், டிக்கெட் விலையை உயர்த்திய மாநில அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும் காந்திய மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.