அறிவுசார் காப்புரிமை தொடர்பாக ஒருநாள் கருத்தரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நவீன ஆராய்ச்சியின் வழியாகக் கண்டறியப்படும் புதிய, முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மற்றும் அதன் வழிமுறைகளை முறைப்படி பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நவீன ஆராய்ச்சியின் வழியாகக் கண்டறியப்படும் புதிய, முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மற்றும் அதன் வழிமுறைகளை முறைப்படி பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 

மத்திய அரசின் ராணுவ பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மேம்பாட்டு மையத்தின் கருத்தரங்க கூடத்தில் நடந்த இந்தக் கருத்தரங்கை ரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பி. வனிதா துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையத்தின் இயக்குநர் த. பரிமேலழகன் உரை நிகழ்த்தினார். 

அவர் கூறியதாவது :- ஆராய்ச்சிகள் எப்போதும் சமூகநலம் சேர்ந்ததாகவும், நம் நாட்டின் நலனை மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம்தான் நாம் காப்புரிமையை பெற முடியும். மருத்துவம், அறிவியல் துறைகளில் நாம் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தபோதும் அவற்றை முறைப்படி காப்புரிமை பெறாததால் நாம் நமது பாரம்பரிய பொருட்களுக்கான காப்புரிமையை இழந்துவிட்டோம். காப்புரிமைதுறை குறித்த அறிவை வளர்ந்துகொள்வதின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்து காப்புரிமை பெறுவதுடன் நமது பாரம்பரிய அறிவுசார் காப்புரிமையை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளம் ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், முதுநிலை அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...