மகாசிவாரத்தியை முன்னிட்டு திருசூர் பயணிகள் ரயில் அலுவா வரையில் ரயில்சேவை தற்காலிகமாக நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மகாசிவாரத்தியை முன்னிட்டு திருசூர் பயணிகள் ரயில் அலுவா வரையில் ரயில்சேவை தற்காலிகமாக நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ) மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை (பிப்.,13) கோவை ரயில்நிலையத்தில் இருந்து மாலை 04.40 மணிக்கு புறப்படும் திருசூர் பயணிகள் ரயில் (ரயில் எண். 56606) அலுவா வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருசூருக்கு 08.45 மணிக்கு சென்றடையும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு அலுவாவை அடைகிறது.
நீட்டிக்கப்பட்ட சேவையில் ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : ஒல்லூர், புதுகாடு, நெல்லயி, இருஞ்சலக்கூடா, சாலக்குடி, கொரட்டியங்காடி,கருக்குட்டி, அங்கமாலி, காலாடி, சவுரா போன்ற இடங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.