முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 16-ம் தேதி வரை போலீஸ் காவல்

லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பேராசிரியர் நியமனத்துக்காக 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சார்பாக ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கை மூன்று னத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

அதன்படி, போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் துணைவேந்தர் கணபதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே,  முதல்வகுப்பு கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதி தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு (பிப்.,13) ஒத்திவைக்கப்பட்டது. மேலும், துணைவேந்தருக்கு தரமான உணவு வழங்கவும், துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதி போலீஸாருக்கு அறிவுறுத்தினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...