நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் சீர்கெட்டு வருவதாகக் கூறி இன்று நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் சீர்கெட்டு வருவதாகக் கூறி இன்று நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா தலங்கள், சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நகர மன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதாகவும், போதிய பார்க்கிங் வசதியில்லாததால் கோடப்மந்து கால்வாய் மீது காங்கீரிட் கட்டிடம் அமைத்து வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட தி.மு.க.,வினர் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இக்கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா தலங்கள், சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நகர மன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதாகவும், போதிய பார்க்கிங் வசதியில்லாததால் கோடப்மந்து கால்வாய் மீது காங்கீரிட் கட்டிடம் அமைத்து வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட தி.மு.க.,வினர் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இக்கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.