அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோவை: மக்கள் குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று கோவை மாவட்ட கிணத்துக்கடவு அருகேயுள்ள மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 38 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தாங்கள் வசித்து வரும் பகுதியில் குடிநீர்,சாக்கடை, கழிப்பிட வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் கூறி மனு அளித்தனர்.
அம்மனுவில், அப்பகுதியில் அமைத்து கொடுக்கப்பட்ட தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும், குடிநீருக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை என்றும் ஓட்டுக்காக மட்டும் தங்களை நாடி வரும் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு தங்களைப் புறக்கணிப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
அம்மனுவில், அப்பகுதியில் அமைத்து கொடுக்கப்பட்ட தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும், குடிநீருக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை என்றும் ஓட்டுக்காக மட்டும் தங்களை நாடி வரும் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு தங்களைப் புறக்கணிப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.