பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, துணைவேந்தர் கணபதி (67), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
70-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் விதிகளை மீறியும், லஞ்சம் வாங்கிக் கொண்டும் பணி நியமனங்கள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, துணைவேந்தர் கணபதி (67), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
70-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் விதிகளை மீறியும், லஞ்சம் வாங்கிக் கொண்டும் பணி நியமனங்கள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.