விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதினையும் மின் வளையத்தால் இணைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டப்படி உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் ரயில்நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாநில தலைவர் பலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்களைக் கொண்டு செல்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றது. எனவே, அதனை கேபிள் லைனாக மாற்றி சாலையோரங்கள் வழியாகக் கொண்டு செல்ல அரசு பரிசீலனை செய்ய வேண்டும். கோபுரங்கள் அமைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நில விவசாயிக்கு மாதம் தோறும் வாடகை வழங்க வேண்டும்" என்றார்.


நாடு முழுவதினையும் மின் வளையத்தால் இணைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டப்படி உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் ரயில்நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாநில தலைவர் பலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரங்களைக் கொண்டு செல்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றது. எனவே, அதனை கேபிள் லைனாக மாற்றி சாலையோரங்கள் வழியாகக் கொண்டு செல்ல அரசு பரிசீலனை செய்ய வேண்டும். கோபுரங்கள் அமைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நில விவசாயிக்கு மாதம் தோறும் வாடகை வழங்க வேண்டும்" என்றார்.
