மழை நீர் செல்லும் ஓடைப்பள்ளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: மழை நீர் செல்லும் ஓடைப்பள்ளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "குருடிமலையில் இருந்து வரும் நீரானது கதிர்நாய்க்கன்பாளையத்தில் உள்ள கல்லணைகளில் நிரம்பி எங்கள் பகுதியில் உள்ள ஓடைப்பள்ளத்தின் வழியாக புதுப்பாளையம் அணைக்குச் சென்றடைகிறது. தற்போது இந்த ஓடையில் பெட்டிக்கடை, இறைச்சிகடை என ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும், இறைச்சி கழிவு, குப்பைகள் என ஓடையில் கொட்டப்படுகின்றது. கழிவு நீர் சுழற்சிக்கு அமைக்கப்பட்டுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அந்த நீர் வழிந்து செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "குருடிமலையில் இருந்து வரும் நீரானது கதிர்நாய்க்கன்பாளையத்தில் உள்ள கல்லணைகளில் நிரம்பி எங்கள் பகுதியில் உள்ள ஓடைப்பள்ளத்தின் வழியாக புதுப்பாளையம் அணைக்குச் சென்றடைகிறது. தற்போது இந்த ஓடையில் பெட்டிக்கடை, இறைச்சிகடை என ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும், இறைச்சி கழிவு, குப்பைகள் என ஓடையில் கொட்டப்படுகின்றது. கழிவு நீர் சுழற்சிக்கு அமைக்கப்பட்டுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அந்த நீர் வழிந்து செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.